Thursday, August 9, 2012

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்-Mohathai kondruvidu-allanenran


1.மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லாலென்றன்
     மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச்  சாய்த்துவிடு - அல்லாலதில்
     சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
     ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
     யாவையும் செய்பவளே!

2.பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்ப
     பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச் 
     செத்த வுடலாக்கு   
இந்த பதர்களையே - நெல்லாமென் 
    எண்ணி இருப்பேனோ 
எந்த பொருளிலுமே - உள்ளேநின்
    றியங்கி இருப்பவளே.
 
3.உள்ளம் குளிராதோ பொய்யாணவ
    ஊன மொழியாதோ?
கள்ள  முருகாதோ -அம்மா பக்திக் 
    கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு 
    வேட்கை தவிராதோ? 
விள்ளற் கரியவளே - அனைத்திலு 
 மேவி இருப்பவளே!

No comments:

Post a Comment